செய்திகள்தமிழகம்

புதியவர்கள் மகளிர் உரிமைத் தொகை பெறும் வாய்ப்பு… மூன்றாம் பாலினத்தவருக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்படும்!

தமிழக பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில், தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பல திட்டங்கள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. அதோடு, மகளிர் நலன் சார்ந்த பல புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.

அதில், புதியவர்கள் மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கான வாய்ப்பு விரைவில் வழங்கப்படப்போகின்றது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். 2025 – 2026 நிதி ஆண்டில், மகளிர் உரிமைத் தொகைக்கு 17,300 கோடி ரூபாயின் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். அதோடு, பணிபுரியும் பெண்களின் வசதிக்காக 10 புதிய தோழி விடுதிகள் கட்டப்படவுள்ளதாகவும், அவை மாவட்டத் தரமாக விரிவாக்கப்படும் எனத் தங்கம் தென்னரசு கூறினார்.

மேலும், மூன்றாம் பாலினத்தவரின் சமூக மேம்பாட்டை உறுதி செய்ய, உயர்கல்வி படிப்பவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

Leave A Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன